Saturday, July 11, 2009

காமெடி கதை

ஆசிரியர் ஒரு மாணவனை பார்த்து நாளை சில வார்த்தைகள் எழுதி விட்டு வரச்சொன்னார் மாணவன் அப்பாவிடம் சென்று வார்த்தைகள் சொல்ல சொல்லி சொன்னான். அதற்கு அவர் நாய் என்று சொன்னார். அதை எழுதினான்... பிறகு கடைக்கு போகும் போது ஒருவர் 'பழைய பொருளுக்கு பேரிச்சம்பழம்' என்று சொன்னார் அதை எழுதினான்.. ஒரு பாப்பா 'நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்' என்று சொன்னாள் அதை எழுதினான்.. பிறகு பஸ்ல போகும் போது ஒருவர் 'துங்காதே தம்பி தம்பி துங்காதே' என்று பாடினார் அதை எழுதினான் ரோட்டில் போகும் போது போர்டுல 'ஸ்டேட் பேன்ங் ஆப் இந்தியா' பார்த்தவுடன் அதை எழுதினான் ஸ்கூலுக்கு போனான்.. ஆசிரியர் மாணவனை பார்த்து சில வார்த்தைகள் எழுதிட்டுது வரச்சொன்னேன் எழுதினியா.. எழுதிட்டேன்.. சொல்லு.. நாய் என்று சொன்னான் என்னையா சொல்ற.. இரு..இந்த ஸ்கூல பத்தி சொல்லு பழைய பொருளுக்கு பேரிச்சம்பழம் என்று சொன்னான் வா எச்.எம் கிட்ட போவோம் அவன் நீ முன்னால போனா நா பின்னால வாரேன் என்று சொன்னான் எச்.எம் தூங்கிட்டுகிட்டு இருந்தார்.. அவன் 'துங்காதே தம்பி தம்பி துங்காதே' என்று பாடினான்... இத உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க அவன் ஸ்டேட் பேன்ங் ஆப் இந்தியா என்று சொன்னான்..

No comments:

Post a Comment